யாழில் சீரற்ற வானிலை: அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறும் தகவல்
யாழ். மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக 10 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்றையதினம் (18.11.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“கனமழை காரணமாக யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
அத்துடன், கடந்த 3 நாட்களில் யாழ். மாவட்டத்தில் 160.8 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நீர் வழிந்தோடக் கூடிய வடிகால்கள் அடைக்கப்பட்டுள்ளதால் நீர் ஆங்காங்கே தேங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஷ்யாவிற்காக வேறு நாட்டில் நாசவேலையில் இறங்கிய உக்ரேனியர்கள்: பகிரங்கப்படுத்திய பிரதமர் News Lankasri
இருக்கும் பிரச்சனையில் பழைய வில்லன் என்ட்ரி, நந்தினி, ரேணுகா எப்படி சமாளிக்க போகிறார்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam