மோசமாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரியை விரட்டியடித்த மக்கள்
பேலியகொட பிரதேசத்தில் பொலிஸ் சீருடையில் வந்த அதிகாரி ஒருவர் தனது மகனின் வாகனத்திற்கு எரிபொருள் பெற்றுக் கொள்ளும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியான நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் 16 மணித்தியாலங்கள் வரிசையில் நின்று எரிபொருள் பெற தயாரான போது, அதனை கண்டுக்கொள்ளாத பொலிஸ் அதிகாரி இடையில் புகுந்து மகனுடைய வாகனத்திற்கு எரிபொருள் பெற்றுள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் கோபமடைந்த நிலையில் பொலிஸ் அதிகாரிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
தான் கடமைக்காகவே எரிபொருள் பெற்றேன் என பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார். எனினும் பொலிஸ் வாகனமின்றி மகனின் வாகனத்தில் வந்து அவர் எரிபொருள் பெற்றுள்ளார்.
சீருடை அணிந்து அசிங்கமான செயற்பாடுகளில் ஈடுபடாதீர்கள், நாங்கள் 16 மணித்தியாலங்கள் இங்கு வரிசையில் நிற்கின்றோம். கடமைக்கு செல்ல வேண்டுமென்றால் பொலிஸ் வாகனத்தில் வாருங்கள்.
மகிந்தவை விரட்டிய எங்களுக்கு உங்களை துரத்துவது பெரிய ஒரு விடயமல்ல. நாளை உங்கள் காணொளி இணையத்தில் வரும் அப்போது பார்த்துக் கொள்ளுங்கள் என கூறி பொலிஸ் அதிகாரியையும் அவரது மகனையும் பொது மக்கள் அங்கிருந்து விரட்டியுள்ளனர்.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், மக்கள் கடும் கோபத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri