புட்டினின் அறிவிப்பால் உண்மையாகப் போகும் பாபா வாங்காவின் கணிப்பு! அதிர்ச்சியில் உலகம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அறிவிப்பால் பாபா வாங்காவின் கணிப்பு உண்மையாக போகிறதா என்ற அதிர்ச்சி எழுந்துள்ளது.
உக்ரைனுடன் கடந்த பல மாதங்களாக ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் பெலாரஸ் நாட்டிற்கு அடுத்த மாதம் அணு ஆயுதங்களை வழங்கப் போவதாக தெரிவித்துள்ளார் விளாடிமிர் புடின்.
கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்யா சென்றிருந்த பெலாரஸ் நாட்டின் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, அந்நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார்.
அப்போது உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட பெலாரஸ் இராணுவம் பயிற்சி மேற்கொள்வது, பெலாரஸ் நாட்டில் அனு ஆயுத கிடங்கு அமைப்பது குறித்தும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அடுத்த மாதம் அதாவது வரும் ஜூலை மாதம் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை வைக்கும் கிடங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகளை தொடங்க உள்ளதாகவும் ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.
இந்த அணு ஆயுத கிடங்கு ரஷ்ய இராணுவத்தின் கண்காணிப்பில் இருக்கும் என்றும் புடின் கூறியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதியின் இந்த முடிவு உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் உக்ரைன் உள்ளிட்ட அதன் ஆதரவு நாடுகள் ரஷ்ய ஜனாதிபதி புடினின் இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளன. இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதியின் இந்த அணு ஆயுத அச்சுறுத்தல் பாபா வங்காவின் கணிப்பை நினைவுபடுத்தியுள்ளது.
அதாவது 2023 ஆம் ஆண்டில் மிகப்பெரிய நாடு ஒன்று மக்கள் மீது அணு ஆயுத போரை மேற்கொள்ளும் என்றும், இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய எமது உலக செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |