அசாத் சாலியை ஏமாற்றிய ரவி கருணாநாயக்க! சிஐடியில் முறைப்பாடு
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, நேற்று (05.01.2026) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணைகளுக்காக முன்னிலையாகியுள்ளார்.
தனக்குச் சொந்தமான 150 மில்லியன் ரூபா பெறுமதியான காணி ஒன்றைப் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக, அசாத் சாலி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளுக்காக நேற்று (05) சி.ஐ.டி. விடுத்திருந்த அழைப்பாணைக்கமைய வாக்குமூலம் அளிப்பதற்காகக் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.
காணி மோசடி விசாரணை
இதன்போது அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், "நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் அளிக்க இன்று அழைக்கப்பட்டிருந்தேன்.
இந்த நாட்டின் முன்னாள் நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, தனக்குச் சொந்தமான காணி ஒன்றைத் முறைக்கேடான முறையில் அபகரித்தமை தொடர்பிலேயே முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளேன்.

அவர் நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகி, மின்சார சபைக்குப் பொறுப்பாக இருந்த காலப்பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் 150 மில்லியன் ரூபா பெறுமதியான எனது காணியை, 15 மில்லியன் ரூபாய்க்குப் பெற்று மோசடி செய்துள்ளார்.
இது குறித்து நான் ஏற்கனவே பல இடங்களுக்குச் சென்று முறையிட்டும் இழுபறிக்குள்ளானது மாத்திரமே எஞ்சியது. எந்த முன்னேற்றமும் இல்லை. நான் சிறையிலிருந்த போது காணிக்குள் அத்துமீறி நுழைந்து இந்த மோசடியைச் செய்துள்ளார்.
எனது மனைவி வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
எனினும், மூன்றாம் தரப்பினரைக் கொண்டு அங்கு கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரியவருகிறது. இந்த முறை இடம்பெறும் விசாரணைகள் மூலம் உரிய நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri