இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் சித்த மருத்துவ முகாம்
கிளிநொச்சி சாந்தபுரத்தில் யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சித்த மருத்துவ முகாம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
'ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அனைவருக்கும் சித்த மருத்துவம்' என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த சித்த மருத்துவ முகாம் இன்று (16.03.2024) காலை முதல் நடைபெற்று வருகின்றது.
குறித்த சித்த மருத்துவ முகாமை, யாழ். இந்தியத் துணைத் தூதரகத்துடன் இணைந்து சுதேச மருத்துவ திணைக்களம் நடாத்தி வருகின்றது.
இந்தியத் துணைத் தூதரக அதிகாரி
மேலும், இந்நிகழ்வில், இந்தியத் துணைத் தூதரகத்தின் கல்வி மற்றும் கலாச்சார அபிவிருத்திக்கு பொறுப்பான அதிகாரி கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |