அயோத்தி இராமர் ஆலய சுவாமி, சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம்
இந்தியாவின் அயோத்தி ஸ்ரீ ராமர் ஆலயத்திலிருந்து(The Ram Mandir) இலங்கை வந்துள்ள சுவாமி கோவிந்த் கிரிஜி மஹாராஜ் நுவரெலியாவில் அமைந்துள்ள சீதையம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
நுவரெலியா ஸ்ரீ சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு நேற்று காலை (24.04.2024) 10 மணிக்கு வருகை தந்த அவரை, ஆலயத்தின் அறங்காவலர் சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் மலர் மாலை அணிவித்து வரவேற்றுள்ளார்.
விசேட பூஜைகள்
இதனை தொடர்ந்து நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி மாணவர்கள் கலாச்சார இசை நடன சிகழ்வும் மங்கள வாத்தியம் முழங்கவும் ஆலய பரிபாலன சபையினரால் ஊர்வலமாக ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
தொடர்ந்து சுவாமி வருகையை நினைவு கூறும் முகமாக நினைவு கல்வெட்டு ஒன்றை திரை நீக்கம் செய்துவைத்ததுடன் விசேட பூஜைகளை தலைமையேற்று நடாத்தியுள்ளார்.
இதன்போது வருகை தந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் ஆசீர்வாதம் வழங்கியதுடன் சுவாமிக்கு ஆலய நிர்வாக சபையினரால் நினைவுப் பரிசு ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் எஸ்போட் விருந்தகத்தில் ஆலய நிர்வாக சபையினருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
