ஓய்வெடுக்கவுள்ள அயோத்தி ராமர் : நிர்வாகத்தின் தீர்மானம்
அயோத்தி ராமர் கோவிலை தினமும் ஒரு மணி நேரம் மூடுவதற்கு கோவிலின் அறக்கட்டளை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, குறித்த கோவிலை தினமும் பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவிக்கையில்,
“கோவிலின் கருவறையில் வீற்றிருக்கும் குழந்தை வடிவ ராமருக்கு ஐந்து வயதே ஆகிறது. அதிகாலை 4 மணிக்கு கண்விழிக்கும் அவரால் தொடர்ந்து விழித்துக்கொண்டே இருக்க முடியாது.
கும்பாபிஷேகம்
இதன் காரணமாக, அவருக்கு ஓய்வு வழங்குவதற்காகவே தினமும் ஒரு மணிநேரம் கோவிலை மூட தீர்மானித்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 500 வருட போராட்டங்களுக்கு பின்னர், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த மாதம் 22ஆம் (22.01.2024) திகதி கும்பாபிஷேகம் நடைபெற்றிருந்தது.
தினமும் ஓய்வு
பிரமாண்டமாக நடைபெற்ற அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு ஏராளமான பிரபலங்கள் வந்திருந்ததோடு இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் சமய சடங்குகள் செய்யப்பட்டு கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், அயோத்தி ராமருக்கு தினமும் ஒரு மணிநேரம் ஓய்வு வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளமை பக்தர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 6 மணி நேரம் முன்

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri
