முல்லைத்தீவில் சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவனி(Video)
முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு முன்பாக சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவனியொன்று நடைபெற்றிருந்தது.
குறித்த பேரணியானது இன்று (26.08.2023) காலை 10.30 மணியளவில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு முன்பாக ஆரம்பமாகி, தண்ணிரூற்று பொதுச்சந்தைக்கு முன்பாக நிறைவு பெற்றிருந்தது.
இந்த பேரணியானது, சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சிறுவர்களுடைய உரிமைகளை பாதுகாக்க கோரியதான விழிப்புணர்வு பேரணியாக இடம்பெற்றது.
பதாதைகள்
சிறுவர்களை துன்புறுத்தாதீர், சிறுவர் உரிமை மீறப்படுவதை கண்டால் 1929 க்கு அழைப்போம், மேதையை அழிக்கும் போதை, சிறுவர்களை துன்புறுத்துபவர்களுக்கு மரண தண்டனை கொடு, சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்துவோம் வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம், சிறுவர்களுக்கான சிறுவர் நேயமுள்ள பாதுகாப்பு மிக்க சூழல் ஒன்றை உருவாக்குவோம் போன்ற பல்வேறு பதாதைகள் தாங்கிய விழிப்புணர்வு பதாதைகளுடன் நடைபவனி இடம்பெற்றிருந்தது.
திருச்சபை ஒன்றின் ஊடாக இடம்பெற்ற குறித்த பேரணியில் அத்திருச்சபையின் ஊழியர்கள், பெற்றோர்கள், சிறுவர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.







