மனித உரிமை மீறல் தொடர்பில் விழிப்புணர்வு வழங்க வேண்டும் : சட்டத்தரணி ரொபின்ஷா நக்கீரன்

Jaffna Human Right Day Sri Lanka
By Kajinthan Dec 11, 2022 07:05 AM GMT
Report

சட்டத்தரணிகள், கற்றறிந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் சாதாரண மக்களுக்கு மனித உரிமை என்றால் என்ன? மனித உரிமை மீறப்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வை வழங்க வேண்டும் என சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணி ரொபின்ஷா நக்கீரன் தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட "அனைவருக்கும் கௌரவம், சுதந்திரம் மற்றும் நீதி" என்னும் தொனிப்பொருளில் சர்வதேச மனித உரிமைகள் தினமானது நேற்று (10.12.2022) யாழில் உள்ள கியூடெக்கில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல் தொடர்பில் விழிப்புணர்வு வழங்க வேண்டும் : சட்டத்தரணி ரொபின்ஷா நக்கீரன் | Awareness Human Rights Violations

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நேற்றைய தினம் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த மனித உரிமைகள் கொண்டாடப்படுவதன் அவசியம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

மனித உரிமை மீறல்

அதாவது இலங்கையில் ஏற்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பில் நாம் அனைவரும் அறிந்த போதிலும் அது தொடர்பில் எந்தவித காத்திரமான, எதிர்க்க முடியாத நிலையில் நாம் அனைவரும் காணப்படுகின்றோம்.

எனவே இந்த மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுவது இனியாவது மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மனித உரிமை என்றால் என்ன? மனித உரிமை மீறப்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்.

சாதாரணமாக கற்ற தரப்பினர் மத்தியில் மட்டும் இந்த மனித உரிமைகள் விழிப்புணர்வு காணப்படாமல், சாதாரண மக்களிடத்திலும் இந்த விழிப்புணர்வு காணப்பட வேண்டும்.

மனித உரிமை மீறல் தொடர்பில் விழிப்புணர்வு வழங்க வேண்டும் : சட்டத்தரணி ரொபின்ஷா நக்கீரன் | Awareness Human Rights Violations

எனவே சட்டத்தரணிகள், கற்றறிந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் சாதாரண மக்களுக்கும் இந்த மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை வழங்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் எமது தொப்புள் கொடி உறவுகளுக்கு, எமது சகோதரர்களுக்கு, எமது தமிழ் பேசும் மக்களுக்கு, மனித உரிமைகள் மீறப்படாமல் நிறுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

மக்களுக்கான உரிமைகள்

மனித உரிமை மீறல் தொடர்பில் விழிப்புணர்வு வழங்க வேண்டும் : சட்டத்தரணி ரொபின்ஷா நக்கீரன் | Awareness Human Rights Violations
மக்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பது என்பதே இந்த வருடத்திற்கான எமது கருப்பொருளாக இருக்கிறது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின், யாழ். பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அங்கவீனர்கள், பெண் தலைமை தாங்கும் குடும்பம், யுத்தத்திலே பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர்கள் மற்றும் பெருந்தோட்ட துறை மக்கள் போன்றவர்கள் அவர்களின் உரிமைக்காக அவர்களால் கூட குரல் கொடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.

அனைவருக்கும் கௌரவம், சுதந்திரம், நீதி என்பது அவசியம் என்ற தலைப்பிலே நாங்கள் நினைவு கூறுகின்றோம்.

இந்த மனித உரிமை தினத்தின் உடைய முக்கியத்துவம் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினுடைய பொதுச் சபையிலே ஒரு முக்கியமான ஆவணம் நிறைவேற்றப்பட்டது.

அதாவது, அனைத்து உலக மனித உரிமை பிரகடனம். இந்த ஆவணம் இன்று 75 வருடங்களாக நிலைத்திருக்கக் கூடிய ஒரு ஆவணமாக இருப்பதற்கு அடிப்படை காரணம், இந்த உலகத்தில் வாழ்கின்ற சகல மனித உயிர்களுடைய உரிமைகளை அங்கீகரித்த ஆவணமாக பார்க்கப்படுகிறது.

மனித உரிமை மீறல் தொடர்பில் விழிப்புணர்வு வழங்க வேண்டும் : சட்டத்தரணி ரொபின்ஷா நக்கீரன் | Awareness Human Rights Violations

சகல மக்களை ஒன்றிணைப்பது மனித உரிமை. எனவே சகல உயிரினங்களும் சமமானவை என்ற அடிப்படையில் அந்த உரிமைகளே அங்கீகரித்த ஆவணமாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக அங்கவினர்கள், பெண் தலைமை தாங்கும் குடும்பம், யுத்தத்திலே பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர்கள் மற்றும் பெருந்தோட்ட துறை மக்கள் போன்றவர்கள் அவர்களின் உரிமைக்காக அவர்களால் கூட குரல் கொடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.

எனவே அரசுடன், சிவில் சமூகமும் அனைத்தும் இணைந்து இந்த ஒதுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுப்பது என்பதை இந்த வருடத்திற்கான எமது கருப்பொருளாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.


மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US