உலக பாரிசவாத தினத்தையொட்டி கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்வு
உலக பாரிசவாத தினம் அக்டோபர் 29ஆம் திகதி அனுசரிக்கப்படும் நிலையில் இதனை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு கல்முனை பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுள்ளது.
நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
கலந்து கொண்டவர்கள்
“ஒவ்வொரு நிமிடமும் பெறுமதியானது” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கல்முனை வடக்கு மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், தனியார் தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.












