கிளிநொச்சியில் தென்னைப் பயிர்ச் செய்கையாளர்களுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளை ஈ தாக்கம் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் அம்பாள்குளம் பகுதியில் வடமாகாண தென்னை பயிர்ச்செய்கையின் பிராந்திய முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் தலைமையில் இன்று (05.03.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கையில் தென்னைப் பயிர்ச் செய்கையில் நோயை ஏற்படுத்தும் வெள்ளை ஈ பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது தொடர்பில் கலந்தரையாடப்பட்டுள்ளது.
மருந்து தெளிக்கப்பட்ட தென்னை மரங்கள்
மேலும், குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடலில் தென்னை பயிர்செய்கையாளர்கள் கலந்து கொண்டிருந்ததோடு கலந்துரையாடலின் பின் பாதிப்புக்குள்ளான தென்னை மரங்களுக்கு உத்தியோகத்தர்களால் கிருமிநாசினி தெளித்தும் காட்டப்பட்டப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |