இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு! தேடும் பணி தீவிரம்
இந்திய இமயமலையில் பனிச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் காலை ஏற்பட்ட பனிச்சரிவில் 41 பேர் சிக்கியிருந்ததுடன்,அதில் ஐந்து பயிற்சியாளர்கள் உட்பட 10 பேர் மலைப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உத்தரகண்டில், இமயமலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டு இருந்தபோது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 27 வீரர்கள் காணாமல்போயிருந்தனர்.
மேலும் நான்கு பேர், 'பேஸ் கேம்ப்' பகுதியில் மீட்கப்பட்டுள்ள மீதமுள்ள 27 பேர், பனிப்பாறை பிளவுகளில் சிக்கி இறந்திருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப்படை, மாநில பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் கூட்டாக இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.