அவுஸ்திரேலிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள்- அறிக்கை வெளியானது.
அவுஸ்திரேலியாவின் கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னாள் பணியாளரான பிரிட்டானி ஹிக்கின்ஸ்(Brittany Higgins) அமைச்சர் ஒருவரின் அலுவலகத்தில் தனது சக ஊழியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக முறையிடப்பட்டமையை அடுத்து நியமிக்கப்பட்ட குழுவினால் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி நாடாளுமன்றத்தின் 51% பணியாளர்கள் சில வகையான கொடுமைப்படுத்துதல், பாலியல் துன்புறுத்தல் அல்லது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன் 63% பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் -
இது நாடாளுமன்ற பணியாளர்களை விட அதிக சதவீதமாகும். இத்தகைய சம்பவங்கள், அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் செயல்திறனை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்று அறிக்கையை தயாரித்த பாலின பாகுபாடு தொடர்பான ஆணையாளர் கேட்ஸ் ஜென்கின்ஸ் (Kate Jenkins) தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அவுஸ்திரேலிய பிரதம மந்திரி ஸ்கொட் மொரிசன் இந்த அறிக்கையில் வெளியான தகவல்கள் பயங்கரவமானவை என்று தெரிவித்துள்ளார்.




உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 11 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
