இலங்கையின் நிலைமையே ஏற்படும்! அவுஸ்திரேலியாவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையின் பொருளாதார நிலைமை ஏற்படும் என அவுஸ்திரேலியாவிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் முதனிலை செல்வந்த பெண் எனப் போற்றப்படும் Gina Rinehart என்பவரே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த செல்வந்தப் பெண்ணின் மொத்த சொத்துக்களின் பெறுமதி 31 பில்லியன் டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் ஆர்ஜன்டீனா ஆகிய நாடுகளைப் போன்று அவுஸ்திரேலியாவும் சௌபாக்கியத்திலிருந்து வறுமை நோக்கிச் செல்லக்கூடிய சாத்தியம் உண்டு என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலவசமாக பொருட்களை வழங்கியும், வரியை அறவீடு செய்தும் சுபீட்சமாக இருந்த இலங்கை இன்று பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு காலத்தில் இலங்கை தேயிலை ஏற்றுமதியில் சிறந்து விளங்கியது எனவும் தற்பொழுது மக்கள் பட்டினியை எதிர்நோக்கி வருவதாகவும், பேச்சு சுதந்திரம் பறிபோயுள்ளதாகவும், மக்கள் மகிழ்ச்சியின்றி வாழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் எதிர்காலம் தொடர்பிரலான நூல் ஒன்றில் இலங்கை மற்றும் ஆர்ஜன்டீனா ஆகிய நாடுகளின் வீழ்ச்சியை ஒப்பீடு செய்து அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
Gina Rinehart கனிய வளத்தொழிற்துறையில் உலக அளவில் சிறந்து விளங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் விஜய் டிவி பிரபலம் ! யார் பாருங்க Cineulagam

ஜேர்மனி செல்லும் கனவில் விமானநிலையம் வந்த நாதஸ்வர கலைஞர்கள்! புரோகிதரால் சுக்குநூறான பரிதாபம்.. எச்சரிக்கை செய்தி News Lankasri

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்பும் அந்நாட்டு பெண்கள்! காரணம் இதுதான் News Lankasri

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan
