அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கையர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் பிரவேசிக்க எவ்வித சாத்தியங்களும் கிடையாது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க இலங்கையும், அவுஸ்திரேலியாவும் இணைந்து செயற்பட்டு வருவதாகத் குறிப்பிட்டுள்ளார்.
படகு மூலம் செல்ல முயற்சி
அண்மைய நாட்களில் சில இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் செல்ல முயற்சித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்து அங்கு குடியேறுவதற்கு பூச்சிய வாய்ப்பே உண்டு என அவர் சுட்டிக்காட்டியுளளார்.
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா பிரவேசித்த எவரும் நாட்டில் குடியேற வாய்ப்பு கிடையாது எனவும், ஏதிலி அந்தஸ்து வழங்கப்படாது எனவும் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சைவ சமயத்தவர்களை மதமாற்றும் நோக்குடன் வருபவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள்: மறவன்புலவு சச்சிதானந்தம் எச்சரிக்கை(Photo)

கிரகங்களின் பெயர்ச்சியால் அடுத்த வாரம் உங்களுக்கு எப்படி அமையப் போகின்றது!அதிலும் கும்ப ராசிக்காரர்களுக்கு-வாரத்திற்கான ராசிபலன்

கிழக்கு பல்கலையின் முன்னாள் உபவேந்தர் படுகொலையுடன் பிள்ளையானிற்கு தொடர்பு: வெளியான பகீர் தகவல் (Video)

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam
