இலங்கைக்கு தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியுள்ள அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலிய அரசாங்கம் 6,300 கிலோகிராம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை இன்று இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் டேவிட் ஹோலி மற்றும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் இயன் கெய்ன் ஆகியோர் கோவிட் பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் இந்த உபகரணங்களை வழங்கியுள்ளார்.
கையளிப்பு விழாவில், உயர் ஸ்தானிகர் ஹோலி உரையாற்றும் போது, “உலகளாவிய கோவிட் நெருக்கடியின் தாக்கங்களை இரண்டு நாடுகளும் ஒன்றாக எதிர்கொள்வதால் அவுஸ்திரேலியா இலங்கைக்கு தமது ஒத்துழைப்பை வெளிப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார்.
சுமார் 16,500 உயர்தர பாதுகாப்பு ஆடைகள் , 25,000 அறுவை சிகிச்சை முகக்கவங்கள் , அவுஸ்திரேலிய நிறுவனமான அன்செல் இலங்கையில் தயாரித்த 100,000 கையுறைகள் என்பன இதில் அடங்கியிருந்தன.
இந்த உதவியுடன் இலங்கையின் கோவிட் தடுப்புக்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின்
நிதியுதவி இப்போது (AUD 11.7 மில்லியன்) இலங்கை ரூபாயில் LKR 1.8 பில்லியன்
பெறுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
