இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருளை வழங்கியுள்ள அவுஸ்திரேலியா
இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக கடற்பரப்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக அவுஸ்திரேலியா, இலங்கை கடற்படையினர் மற்றும் விமானப்படையினருக்கு இலவசமாக எரிபொருளை அன்பளிப்பு செய்துள்ளது.
கடற்படையினருக்கு 450 மெற்றி தொன் எரிபொருளும், விமானப்படைக்கு 27 ஆயிரம் லீட்டர் விமான எரிபொருளும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோத குடியேற்றவாசி அவுஸ்திரேலியா செல்வதை தடுத்து நிறுத்தி வரும் கடற்படை
கடற்பரப்பின் ஊடாக நடக்கும் குற்றங்களை தடுப்பதற்காக விமான மற்றும் கடற்படை நடவடிக்கை தடையின்றி முன்னெடுக்க இந்த எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத குடியேற்றவாசிகள் அதிகளவில் கடல் வழியாக அவுஸ்திரேலியாவை நோக்கி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த பல சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவிடம் எரிபொருளை கொள்வனவு செய்து இலங்கைக்கு வழங்கிய அவுஸ்திரேலிய கடற்படை
விமானப்படையின் ஜெட் விமானங்களுக்கு இந்த நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு செய்து வருவதால், அவுஸ்திரேலியா, விமானப்படையினருக்கு எரிபொருளை அன்பளிப்பு செய்துள்ளது.
அவுஸ்திரேலிய கடற்படை, இந்தியாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்து, இலங்கைக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.