மீண்டும் வெடிக்கப்போகும் போராட்டங்கள்! போராளிகள் உயிர் தியாகம் செய்ய வேண்டும் என்கிறார் சரத் பொன்சேகா
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுடன் ஒன்றிணைந்து எதிர்வரும் 9ஆம் திகதி போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் தீர்மானித்துள்ளன.
அன்றைய தினம் தொழிற்சங்கப் போராட்டங்களுடன் ஆர்ப்பாட்டங்களையும், ஆர்ப்பாட்டப் பேரணிகளையும் நடத்துவதற்கு திட்மிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை போராட்டக்களத்தில் போராளிகள் சுடப்பட்டால் 20 முதல் 25 பேர் சாகலாம், எனினும் போராட்டம் நிற்காது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இராணுவம் மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் இராணுவத் தலைமையகம் அழியும். போராட்டம் வெற்றிபெற போராளிகள் உயிர் தியாகம் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 14 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
