சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை விடுவிக்குமாறு கோரிக்கை
இலங்கையின் மனித உரிமை சட்டத்தரணியை விடுவிக்குமாறும், அவரை 15 மாதங்கள் தடுத்து வைக்க பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை ரத்து செய்யுமாறும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை விடுவிக்குமாறு சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச நீதிபதிகள் ஆணையம் உள்ளிட்ட 11 உரிமைகள் குழுக்கள் இலங்கையை வலியுறுத்தியுள்ளன.
ஹிஸ்புல்லாவின் தடுத்து வைத்தல் விடயம், இந்த ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தாலும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் உரிய செயல்முறை இல்லாமல் மிக நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலரில் ஹிஸ்புல்லாவும் ஒருவர் என்று உரிமைக் குழுக்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளன.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், நீதித்துறை மறு ஆய்வு இல்லாமல் நீண்டகாலமாக ஒருவரை தடுத்து வைக்க அனுமதிக்கிறது.
இந்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கான உறுதிமொழிகள் இருந்தபோதிலும், தன்னிச்சையான தடுப்புக்காவலை செயல்படுத்த இலங்கை தொடர்ந்தும் இந்த சட்டத்தை பயன்படுத்துவதாக மனித உரிமைக்குழுக்கள் தெரிவித்துள்ளன.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 15 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam