உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட சட்டமா அதிபர்: வாக்குமூலம் பதிவு செய்ய உத்தரவு
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு படுகொலைகள் தொடர்பாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவரது இல்லத்திற்கு செல்ல குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இணங்கியுள்ளது.
வாக்குமூலத்தை வழங்குவதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அலுவலகத்திற்கு வருமாறு டி லிவேராவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பல தடவைகள் அறிவித்திருந்தனர்.

நீதிமன்றத்தில் அறிவிக்க உத்தரவு
எனினும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அவ்வாறான அறிவிப்புகளை அனுப்புவதற்கு தடைவிதிக்கும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கக் கோரி முன்னாள் சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொராயிஸ் ஆகியோர் அடங்கிய இரண்டு நீதியரசர்கள் அடங்கிய அமர்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தப்புல டி லிவேராவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய அவரது இல்லத்திற்குச் செல்லும் நீதிமன்றத்தினால் முன்மொழியப்பட்ட சமரசத்திற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர். அதன்படி, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவுடன் அறிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
உக்கிரமடையும் யுத்த களம்....! ஆயிரக்கணக்கில் பலியான குழந்தைகள்: துண்டிக்கப்படும் காசா நிலப்பரப்பு (Video)
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri