ஹிசாலினுக்கு நீதிவேண்டி மட்டக்களப்பில் கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
உயிரிழந்த சிறுமி ஹிசாலினுக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து வருகை தந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி ஹிசாலினுக்கு நீதி கிடைப்பதற்கு ஜனாதிபதியும், அரசாங்கமும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
அத்துடன் இனிவரும் காலங்களில் சிறுவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் வகையில் முறையான சட்டத்தினை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்துள்ளனர்.


நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan