இந்தியாவில் இருந்து சிவப்பு பச்சை அரிசியை தருவிக்கும் முயற்சி தோல்வி
இந்தியாவில் சிவப்பு பச்சை அரிசி கிடைக்காததால், அங்கிருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததாக வர்த்தக விவகார, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிக்க சிவப்பு பச்சை அரிசியை இறக்குமதி செய்ய இந்திய உயர்ஸ்தானிகரகம், மற்றும் இந்திய விநியோகஸ்தர்களுடன்; அரசாங்கம் கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த முயற்சி தோல்வியடைந்ததாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள ஆலைகளிலும் சிவப்பு பச்சை அரிசி கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
சிவப்பு அரிசி
எனினும் நிலைமையை எப்படியாவது சமாளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் முந்தைய அரசாங்கத்தால் சிவப்பு அரிசியை இலவசமாக விநியோகித்தது பற்றாக்குறையை அதிகப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் பீயர் உற்பத்தி தொழில், கோழிப்பண்ணைகள், அலங்கார மீன் வளர்ப்புத் தொழில் மற்றும் அரிசி மாவுக்கும் அரிசி பயன்படுத்தப்படுகிறது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 13 மணி நேரம் முன்
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam