யாழில் பேச்சுவார்த்தைக்கு அழைத்த இளைஞன் மீது தாக்குதல் முயற்சி
யாழ்ப்பாணத்தில் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ஒருவர் பேச்சுவார்த்தைக்காக இளைஞனை அலுவலகத்துக்கு அழைத்து, மிரட்டி தாக்குவதற்கு முயற்சித்த சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
சங்கானை பிரதேச செயலகத்தில் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தரே இவ்வாறு தாக்குதல் நடாத்த முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜே/160 கிராம சேவகர் பிரிவில் இளைஞர் கழகம் ஒன்று நிர்வாக தெரிவு கூட்டம் வைக்காமல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் கழகமானது ஏனைய கழகங்களை போல் அல்லாது வருடா வருடம் பதிவு செய்ய வேண்டிய தேவை உள்ளது.
நிர்வாக தெரிவு கூட்டம்
ஜே/160 கிராம சேவகர் பிரிவில் உள்ள அந்த கழகத்தினை கடந்த ஆறு வருடங்களாக (2018.02.12ஆம் திகதி முதல்) நடாத்தியவர்களது ஆலோசனையையோ அல்லது அவர்களது பங்களிப்பையோ பெறாமல், நிர்வாக தெரிவு கூட்டமும் நடாத்தாமல் சங்கானை பிரதேச செயலக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தருக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த ஒருவர் மூலம் குறித்த கழகம் மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த புதிய நிர்வாகத்தில் இருப்பவர்கள் தங்களது விருப்பத்தின் பேரில், விரும்பியவர்களை தலைவர் செயலாளர், பொருளாளர் என பெயரிட்டு விட்டு கழகத்தினை பதிவு செய்யதுள்ளனர்.
ஆனால் ஏற்கனவே ஆறு வருடங்களாக கழகத்தினை நடாத்தியவர்கள் கடந்தகால ஆவணங்களை தமது கைவசம் வைத்துள்ளனர்.
ஆனவே ஆறு வருடங்களாக கழகத்தினை நடாத்தியவர்கள், "நிர்வாக தெரிவு கூட்டம் நடாத்தாமல் ஒவ்வொருவரும் தாங்கள் தான் நிர்வாகம் என்று எப்படி பதிவு செய்ய முடியும் என கேள்வி எழுப்பி, நிர்வாக தெரிவு கூட்டத்தினை நடாத்தி புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்யுமாறு சங்கானை பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தரிடத்திலும், ஜே/160 பிரிவு கிராம சேவகரிடத்தும், யாழ்ப்பாண மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளரிடத்திலும் வேண்டுகோள் விடுத்த்துள்ளனர்.
இந்நிலையில் ஏற்கனவே கழகத்தினை நடாத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக யாழ்ப்பாண தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
தாக்குதல் முயற்சி
இந்நிலையில் கழகத்தினை ஏற்கனவே நடாத்தியவர்களும் இன்றையதினம் அங்கு சென்றுள்ளனர். யாழ்ப்பாண தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் அவர்கள் வேறு அலுவலாக வெளியில் சென்றதால், அவருக்கு அடுத்த உத்தியோகத்தர் மற்றும் சங்கானை இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ஆகியோருடன் இது குறித்து கலந்துரையாடுமாறு கூறி சென்றுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றவேளை, ஏற்கனவே கழகத்தினை நடாத்தியவர்கள் கேட்ட கேள்விகளுக்கு, இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் சரியான பதிலை வழங்காமல் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சரியான பதிலை வழங்க முடியாத இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் இளைஞன் மீது இரண்டு தடவைகள் தாக்குதலுக்கு முயற்சித்து தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஜனநாயக முறைப்படி நிர்வாகத்தை தெரிவு செய்யுமாறு இளைஞர்கள்கேட்டதற்கு, இளைஞர் சேவைகள் உத்தியோகத்தரின் இவ்வாறான செயற்பாடு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் அந்த உத்தியோகத்தர் 8 வருடங்களுக்கு மேலாக சங்கானை பிரதேச செயலகத்தில், இடமாற்றம் இன்றி கடமை புரிகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri

மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்னுடன் காதல் - வருங்கால மருமகளை திருமணம் செய்யும் மாமனார் News Lankasri
