இலங்கையர்களின் தனிப்பட்ட தரவுகள் வெளிநாடுகளின் கைகளுக்கு செல்லும் அபாயம்
இலங்கையர்களின் தனிப்பட்ட தரவுகளை வேறு வழியில் பெறுவதற்கான ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்னணு தேசிய அடையாள அட்டைகளை தயாரிப்பதற்கு, வெளிநாடு ஒன்றுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதன் மூலம் இலங்கையர்களின் தரவை கடுமையான ஆபத்தில் ஆழ்த்தும் என எதிர்ப்பு வெளியிட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து, வேறு வழியில் அந்தத் தரவைப் பெறுவதற்கான ஆபத்து இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மின்னணு அடையாள அட்டை
ஆட்பதிவு திணைக்களத்திற்கு மின்னணு அடையாள அட்டைகளை வழங்குவதற்கு தேவையான மென்பொருளை உள்ளூர் நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்தும் பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
எனினும் KYC (Know Your Customer) எனப்படும் மற்றொரு மென்பொருள் மூலம் அந்த நாட்டிற்கு மென்பொருளை வழங்கி, அமைப்பின் தரவை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்க முயற்சி நடப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ள நாட்டைச் சேர்ந்த குழுவின் பங்கேற்புடன் ஏற்கனவே பல கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளது.
மென்பொருள்
இந்த வழியில் Mosip KYC மென்பொருளை வழங்குவதன் மூலம், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பான அனைத்து தரவையும் அதன் மூலம் அணுக முடியும் என மென்பொருள் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மென்பொருள் தயாராகும் வரை இலங்கை மென்பொருள் மூலம் டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருக்கலாம் என்று துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த KYC மென்பொருளுக்கான விவரக்குறிப்புகள், சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தால் மட்டுமே தயாரிக்கப்படும் வகையில் தயாரிக்கப்பட உள்ளது.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 4 நாட்கள் முன்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று முடிச்சு சீரியல் நடிகை.. அவரே போட்ட பதிவு, குவியும் ஆறுதல் Cineulagam

சாம்சங்கில் அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் வெற்றி பெற்ற நபர் யார்? News Lankasri

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திய ஆயுதங்கள்... பதிலளிக்க மறுத்த சீன இராணுவம் News Lankasri

சாணக்கிய நீதி: இந்த பழக்கம் இருப்பவர்கள் வாழ்வில் வெற்றியடைவது உறுதி... உங்களிடமும் இருக்கா? Manithan
