தனிமையில் இருந்த வயோதிபர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு கொள்ளை
கொள்ளைக்கும்பல் ஒன்று தனிமையில் இருந்த வயோதிபர்கனைள தாக்கிவிட்டு வீட்டில் இருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் வணிக நிலையத்தில் இருந்த இலட்சம் ரூபா பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது, முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் இன்று அதிகாலை 2.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வீட்டிற்குள் நுளைந்த மூன்று கொள்ளையர்கள் வயோதிப தந்தையினை தாக்கி காயப்படுத்திவிட்டு வயோதிப தாயினை கத்திமுனையில் அச்சுறுத்தி 7 இலட்சம் ரூபா பணம் , 32 பவுண் நகைகள் என்பனவற்றினை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதன்போது கொள்ளையர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த 60 அகவையுடைய வயோதிபர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் தலைமையக அதிகாரிகள் மற்றும் தடயவியல் பொலிஸார்
சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



