வாழைச்சேனை பகுதியில் பேருந்து மீது தாக்குதல் (Photos)
வாழைச்சேனையில் இருந்து மீராவோடை வழியாக அக்கரைப்பற்றை நோக்கி சேவையில் ஈடுபடும் பேருந்து மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவமானது இன்று அதிகாலை(25.09.2023) மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் 18ஆம் கட்டைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
வாழைச்சேனையில் இருந்து மீராவோடை வழியாக அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மீது இனந்தெரியாத நபர்களால் தண்ணீர் போத்தலைக் கொண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பேருந்தின் கண்ணாடிகள் வெடித்துச் சிதறியுள்ளதுடன், நடத்துனரும் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
மேலும், தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென கூறப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.






பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
