தொடரும் பதற்ற நிலை! இஸ்ரேலுக்காக கொந்தளித்த உலக நாடுகள்
ஹமாஸ், இஸ்ரேல் மீது நடத்திய பயங்கரவாத தாக்குதலினால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
உலக நாடுகள் கண்டனம்
ஜேர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்க, ஆசிய நாடுகளைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவும் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெளியிட்டுள்ள தனது கண்டன பதிவில், 'இந்த நேரத்தில் இஸ்ரேலுடன் அவுஸ்திரேலியா துணை நிற்கிறது. ஹமாஸ் அமைப்பின் பாரபட்சமற்ற, வெறுக்கத்தக்க தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம். தங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது' என தெரிவித்துள்ளார்.
பதற்ற நிலை
இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகேரி, தங்கள் இராணுவம் நடத்திய தாக்குதலில் 400க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறினார்.
அதேபோல் காசா முனையில் ஹமாஸ் குழுவினரின் இருப்பிடங்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்புப்படை தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
