காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் தொடர்பான தீர்ப்பு
கொழும்பு, காலிமுகத்திடலில் கடந்த வருடம் மே மாதம் 9ஆம் திகதி
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின்
சந்தேகநபர்கள் அனைவரினதும் வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோட்டை
நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான வழக்கு நேற்று (17.01.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவை நீதிவான், பிறப்பித்துள்ளார்.
மேலும், குடிவரவு - குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு அறிவிக்குமாறும் நீதிமன்றப் பதிவாளருக்கு நீதிவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
இந்த வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன என்றும், அதற்கான கோப்பு சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மிலன் ஜயதிலக்க, சனத் நிஷாந்த மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 36 சந்தேகநபர்களில் 30 பேர் திறந்த நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri