மன்னாரில் விளையாட்டு வீரர் மீது தாக்குதல்
மன்னாரில் வலய கோட்ட மாகாண விளையாட்டுப் போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்ற மாணவன் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கடந்த 14ஆம் திகதி இல்ல மெய் வல்லுனர் போட்டியிலும் வெற்றியீட்டினார் என கூறப்படும் இவர் வெற்றி கழிப்பை கொண்டதடியதாகக் கூறி அவரை அதே இடத்தினை சேர்ந்த ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
தாக்கப்பட்டவர் காயமுற்ற நிலையில் யாழ் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
விசாரணைகள்
தாக்குதலை மேற்கொண்டவர் பல தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளவர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், அடம்பன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்