யாழில் வீடு புகுந்து தாக்குதல்: இளைஞர் ஒருவர் படுகாயம்
யாழ். வடமராட்சி கிழக்கு, வேம்படி - வத்திராயன் பகுதியில் வீடு புகுந்து இளைஞரொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவமானது நேற்றையதினம் (27.04.2023) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். பருத்தித்திறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீடு புகுந்து தாக்குதல்
பாதிக்கப்பட்ட இளைஞர் நரசிம்மர் ஆலயத்திற்க்கு செல்லும் போது தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் அவரை நாளாந்தம் கேலி செய்து வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறான சூழலில் நேற்றைய தினம் குறித்த நபர்களே வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெற்றோரை இழந்த நிலையில் குறித்த இளைஞரும், அவரது சகோதரரும் தனிமையில் வாழ்ந்து வருவதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
