எத்தியோப்பியாவில் கிராமங்களுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு: 230 பேர் பலி- செய்திகளின் தொகுப்பு
எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் கிராமங்களுக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 230 மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இத்தாக்குதல் ஒரொமியா நகரில் உள்ள கிராமங்களில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்ததால் பலியானோரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதலில் அம்ஹரா இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் பலியானதாகவும் தாக்குதலை அடுத்து அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,