காலி பத்தேகம பிரதி தவிசாளர் மீது தாக்குதல்.. பிரதான சந்தேகநபர் விளக்கமறியலில்!
காலி பத்தேகம பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் சமன் சி.லியனகே தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நான்கு நாட்களாக கைது செய்யப்படுவதைத் தவிர்த்த பின்னர் அவரது சட்டத்தரணி ஊடாக பொத்தல பொலிஸில் நேற்று சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றின் உத்தரவு
சந்தேகநபர் பின்னர் காலி பிரதான நீதவான் சமீர தொடம்கொட முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி, பத்தேகம பிரதேச சபையின் பிரதித் தலைவர் சமன் சி.லியனகேவை சந்தேக நபர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த லியனகே காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |