அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
அஸ்வெசும நலன்புரித்திட்ட உதவித்தொகை வழங்கும் நடவடிக்கையின் போது பாதிக்கப்பட்ட நபர்களைக் கண்டறிந்து முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு 10 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரித்திட்டத்தின் நலன்கள்
அஸ்வெசும நலன்புரித்திட்டத்தின் நலன்களை வழங்குவதில் காணப்படும் அசௌகரியங்கள், நியாயமற்ற செயல்முறை மற்றும் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்குழுவின் மூலம் குறித்த நலத்திட்டத்திற்குள் உள்வாங்கப்படாத சமுர்த்தி சலுகைகளை கொண்ட தகுதியான மக்கள் தொடர்பில் உள்ள குறைகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 15 மணி நேரம் முன்
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri