பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ மற்றும் புகைப்படங்கள்:ஹிருணிகாவிற்கு பறந்த கடிதம்
தன்னை அவமதித்தமைக்காக 1.5 பில்லியன் ரூபா நட்டஈடாக வழங்குமாறு கோரி, ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்க, ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் ஆதர்ஷா கரதன ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் ஆதர்ஷ் கரதன ஆகியோர் தன்னைப் பற்றி போலியான காணொளி ஒன்றை தயாரித்து அதனை வெளியிட்டு அந்த காணொளிக்கு தவறான விளக்கமும் வழங்கியதன் மூலம் தமக்கு ஏற்பட்ட அவமானம் தொடர்பில் தாம் அறிவித்தல் ஒன்றை அனுப்பியுள்ளதாக பேராசிரியர் அஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
நற்பெயருக்கு களங்கம்
கடந்த 23ஆம் திகதி இருவரும் நடத்திய ஊடகவியலாளர் மாநாடு பொதுமக்களை தவறாக வழிநடத்தி அதன் மூலம் தனக்கு எதிரான பொதுக் கருத்தை உருவாக்கி தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஹிருணிகா பிரேமச்சந்திரவிடம் 500 மில்லியன் ரூபாவும், ஆதர்ஷ கரதனவிடமிருந்து ஒரு பில்லியன் ரூபாவும் நட்டஈடாக வழங்குமாறு கோரி, பேராசிரியர் ஆஷு மாரசிங்க தனது சட்டத்தரணிகள் ஊடாக இந்தக் கடிதங்களை அனுப்பியுள்ளார்.
இதேவேளை சமீபத்தில் அவர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்ட அனைத்து தகவல்களும் பொய்யானவை என்றும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 3 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
