தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நீர் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர்கள் சங்கம்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வடிகாலமைப்புச் சபையின் தலைவருடனான சந்திப்புகளில் பங்கேற்காமை மற்றும் டெண்டர் மதிப்பீட்டுக் குழுக்களின் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமை போன்ற சில தொழிற்சங்க நடவடிக்கைகளை அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (05.01.2024) முதல் முன்னெடுத்துள்ளனர்.
வெற்றிடமாகவுள்ள பதவிகள்
வடிகாலமைப்புச் சபையிலே மேலதிக பொது மேலாளர் மற்றும் பொது மேலாளர் திட்டப்பணிகளுக்கு ஆட்களை நியமிக்க வேண்டிய நிலைலை காணப்படுகிறது.

ஆனால் நீர் வழங்கல் சபையின் தலைவர் குறித்த இரு வெற்றிடங்களையும் தவிர்த்து மேலதிக பொது முகாமையாளர் தணிக்கை மற்றும் மேலதிக பொது முகாமையாளர் வர்த்தகம் ஆகிய நியமனங்களை வழங்குவதற்கு தீர்மானித்து வருவதாக பொறியியலாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதனால், குறித்த வெற்றிடம் தொடர்பான கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்காவிடில் தாம் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தயார் நிவையில் உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam