யாழ். இந்திய துணைத் தூதரகத்தால் உதவித் திட்டம் வழங்கல்
யாழ். ஊர்காவற்துறை கிராமத்தை சேர்ந்த கடற்தொழிலாளர்களுக்கு மீன்பிடி வலைகளும், உலர் அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இந்திய துணை தூதரக ஸ்தானிகர், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் மற்றும் ஊர்காவற்துறை மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பண்பாட்டு செழுமை
நிகழ்வில் உரையாற்றிய துணை தூதரக ஸ்தானிகர் சாய் முரளி, ஊர்காவற்துறை என்பது யாழ்ப்பாணத்தின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க, பண்பாட்டு செழுமை வாய்ந்த பகுதி.
இந்திய ஆதரவுடன் நவீனமயமாக்கப்பட்ட குருநகர் மீன்பிடி வலை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட வலைகளை வழங்குவதில் மகிழ்ச்சி.
இந்திய அரசின் சேவைத் திட்டங்கள்
உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் இவ்வலைகள் மூலம் பலன்கள் சமூகத்துக்குள் தங்குகின்றன.
அதேவேளை இந்திய அரசின் பொது மக்களுக்கான சேவைத் திட்டங்களும் சமூக பங்களிப்பையும் அதிகரிக்கவுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
