பாடசாலை மாணவரால் ஆசிரியர் மீது தாக்குதல்! வெளியான காரணம்
பம்பலப்பிட்டி பிரதேச பாடசாலையொன்றில், மாணவர் ஒருவர் வகுப்பு ஆசிரியர் ஒருவரை தாக்கியுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரே இவ்வாறு ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
தாக்குதலுக்கான காரணம்
இதேவேளை தாக்கப்பட்டதாக கூறப்படும் ஆசிரியரும் மாணவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவரால் தனது இளைய சகோதரர் தாக்கப்படுவதை அறிந்த அவரது மூத்த சகோதரர் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர் ஒருவரை நாற்காலியை தூக்கி தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.