பிரியந்த குமாரவின் படுகொலையை நியாயப்படுத்தியவருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
பிரியந்த குமாரவின் படுகொலைய நியாயப்படுத்தி சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டு மத உணர்வுகளை தூண்டிய நபருக்கு பாக்கிஸ்தான் குஜ்ரன்வாலா பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பிரியந்த குமாரதாக்கப்படும் வீடியோவை தனது யூடியுப்பில் பதிவேற்றிய முகமட் அட்னான் என்ற 27 வயது நபர் கொலையையும் உடல் எரியூட்டப்படுவதையும் நியாயப்படுத்தியிருந்தார்.
இதனை தொடர்ந்து மதகுரோதத்தை பரப்பி பொதுமக்களின் உணர்வுகளை தட்டிஎழுப்பிய குற்றச்சாட்டினை பொலிஸார் அந்த நபருக்கு எதிராக பதிவு செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து இடம்பெற்ற நீதிமன்ற விசாரiணியன் பின்னர் அந்த நபருக்கு நீதிமன்றம் ஒருவருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இலங்கையைச் சேர்ந்த 40 வயதான பிரியந்த குமார தியவடன என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடன கனேமுல்ல நகரின் அருகே உள்ள கெந்தலியத்த பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 13 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri