பிரியந்த குமாரவின் படுகொலையை நியாயப்படுத்தியவருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
பிரியந்த குமாரவின் படுகொலைய நியாயப்படுத்தி சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டு மத உணர்வுகளை தூண்டிய நபருக்கு பாக்கிஸ்தான் குஜ்ரன்வாலா பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பிரியந்த குமாரதாக்கப்படும் வீடியோவை தனது யூடியுப்பில் பதிவேற்றிய முகமட் அட்னான் என்ற 27 வயது நபர் கொலையையும் உடல் எரியூட்டப்படுவதையும் நியாயப்படுத்தியிருந்தார்.
இதனை தொடர்ந்து மதகுரோதத்தை பரப்பி பொதுமக்களின் உணர்வுகளை தட்டிஎழுப்பிய குற்றச்சாட்டினை பொலிஸார் அந்த நபருக்கு எதிராக பதிவு செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து இடம்பெற்ற நீதிமன்ற விசாரiணியன் பின்னர் அந்த நபருக்கு நீதிமன்றம் ஒருவருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இலங்கையைச் சேர்ந்த 40 வயதான பிரியந்த குமார தியவடன என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடன கனேமுல்ல நகரின் அருகே உள்ள கெந்தலியத்த பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 15 மணி நேரம் முன்
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam