ஹரினை கைது செய்வது பிரச்சினைக்குரியது! - ரணில்
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவை கைது செய்வது பிரச்சினைக்குரியது என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஹரின் பெர்ணான்டோ, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார். அவரின் உடல்நலம் குறித்து விசாரிக்க வைத்தியசாலைக்கு சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களுக்கு இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்.
ஹரின் பெர்ணான்டோவை கைது செய்வது தொடர்பில் தற்போது பிரச்சினை உள்ளது. ஏனெனில், முதலில் காரணமாக குறிப்பிட்ட விடயம் ஏப்ரல் 21 தாக்குதலாகும்.
எவ்வாறாயினும், அமைச்சின் விடயமொன்று தொடர்பில், நீதவான் நீதிமன்றில் இன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பானது என்றால் இந்த விடயம் தொடர்பில் செயற்பட வேண்டும் அல்லது இந்த விடயம் தொடர்பில் செயற்பட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
