இளைஞர்களை நினைவேந்தல் நிகழ்வுகளிலிருந்து விலக செய்யும் செயற்பாட்டையே அரசாங்கம் முன்னெடுக்கிறது: அருட்தந்தை மா.சத்திவேல்

Sri Lankan Tamils Maaveerar Naal
By Shan Dec 01, 2023 08:49 PM GMT
Report

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பலரை கைது செய்தமை நினைவேந்தல் போன்ற நிகழ்வுகளிலிருந்து இளைஞர்களை விலக செய்யும் செயற்பாடே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரால் நேற்று (01.12.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

“அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாவீரர் வாரமும் மாவீரர் நாளும் ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு தேசிய நிகழ்வாகும்.

போலித் துவாராகா தொடர்பில் உருத்ரகுமாரன் காட்டமான அறிக்கை

போலித் துவாராகா தொடர்பில் உருத்ரகுமாரன் காட்டமான அறிக்கை

அடுத்த கட்ட நடவடிக்கை

அதனை வடக்கிலும்,கிழக்கிலும்,புலம்பெயர் நாடுகளிலும் வேதனைக்கு மத்தியிலும் அந்நாட்களில் எழுச்சியுடன் ஒன்று கூடி உயிர் கொடையாளர்களுக்கு சுடர் ஏற்றி நினைவஞ்சலி செய்வதோடு நின்று விடாது தமிழர்களின் தேசத்திற்காக போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க திடசங்கட்பம் கொள்ளும் நாளும் இதுவாகும்.

இதனை பாரிய இனப்படுகொலைகளோடு அழிக்க நினைத்தவர்களுக்கு அது தோல்வியே என தற்போது உணர்வதால் இந்நிகழ்வுக்கு எதிரான செயற்பாடுகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு வடிவங்களில் கூட்டாக அழிப்பு வேலைகளை நடைமுறைப்படுத்த எதிர் சக்திகள் திட்டமிட்டுள்ளன என்பதை இவ்வருட சம்பவங்கள் உணர்த்துகின்றன.

இளைஞர்களை நினைவேந்தல் நிகழ்வுகளிலிருந்து விலக செய்யும் செயற்பாட்டையே அரசாங்கம் முன்னெடுக்கிறது: அருட்தந்தை மா.சத்திவேல் | Arrested Under The Prevention Of Terrorism Act

இதற்கு வடகிழக்கு தமிழ் தேசிய உணர்வாளர்கள் கூட்டாக தமது அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.

தற்போது நாம் முகம் கொடுக்கும் சிக்கல்களை சிவப்பு சமிக்ஞையாக ஏற்காவிடின் பாரிய விலை கொடுக்கும் நிலை உருவாகும். தமிழர் தேசத்திற்கும், தேசியத்திற்கும் எதிரான சக்திகளிடம் சோரம் போன தமிழர் முகமூடி தரித்த சிலர் மேதகு தலைவரின் மக்களென ஒரு போலியை மேடையேற்றி தீட்டிய சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது.

"தலைவர் இருக்கிறார்". "அவர் வருவார்" "வருவார்" என கூறி இன்னும் ஒரு தலைமைத்துவம் உருவாகக்கூடாது என நினைத்தவர்கள் தமது முயற்சியின் அடுத்த கட்டமாக போலி முகத்தை மேடையேற்றி அவமானப்பட்டுள்ளனர்.

இத்தோடு அவர்கள் நின்றுவிடப் போவதில்லை. இன்னும் ஒரு பக்கம் சேனையின் பெயரால் தாயகத்தில் இயங்கும் அமைப்பு ஒன்று மாவீரர்களை கொச்சைப்படுத்தும் வகையில் அவர்களை அவமானப்படுத்தும் வண்ணம் முகநூலில் பதிவிட்டுள்ளது.

அதன் மூலம் புதிய தலைமுறையினரின் மூளையை சலவை செய்து அரசியலில் இருந்து தூரமாக்க முயற்சிக்கின்றனர்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் சாத்தியம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் சாத்தியம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது

உயிர் தியாக வரலாற்றை எம் காலத்திலேயே குழி தோண்டி புதைக்கவும் வழி செய்கின்றனர்.

அடுத்ததாக தமிழர்கள் ஏற்றுக் கொள்ளாததும் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டதுமான 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க கூட்டமாக காவடி தூக்கி கொடி பிடிக்க இன்னும் ஒரு கூட்டம் பகிரங்கமாகவே எழுந்து நிற்கின்றது.

இதனையும் சதியாகவே கொள்ளல் வேண்டும். இவர்கள் தமிழ் மக்கள் பேரவை இயங்கிய காலத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என ஆவணம் தயாரித்து பௌத்த மகா சங்கத்திடம் தூக்கி சென்றதை மறந்துவிட்டனர்.

இளைஞர்களை நினைவேந்தல் நிகழ்வுகளிலிருந்து விலக செய்யும் செயற்பாட்டையே அரசாங்கம் முன்னெடுக்கிறது: அருட்தந்தை மா.சத்திவேல் | Arrested Under The Prevention Of Terrorism Act

இவர்களே தமிழ் மக்கள் பேரவைக்கு வீழ்ச்சிக்கும் காரணமானவர்கள் என்பது இப்போது புலனாகின்றது. இது இவ்வாறு இருக்க இலங்கை அரசு மீண்டும் புலி உருவாக்கம் என்பதை கையில் எடுத்து இவ்வருடம் மாவீரர் தின நிகழ்வோடு பலரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து இருக்கின்றது.

மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாக மேலும் பலருக்கு வலை வீசிக் கொண்டிருக்கின்றனர். இதுவும் இளைஞர் மத்தியில் அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு பயத்தை உருவாக்கும் செயலாகும்.

நினைவேந்தல் போன்ற நிகழ்வில் இருந்து சுயமாகவே விலகச் செய்வதற்கான வேலை திட்டங்களில் இதுவும் ஒன்று எனக் கூறலாம். 2009ல் விடுதலை இயக்கத்தை அழிப்பதாக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்களை படுகொலை செய்த இலங்கை அரசு தமிழர்களை அரசியல் ரீதியாக படுகொலை செய்வதற்கு பல்வேறு சதிகளை கூட்டு சேர்ந்து தீவிரப்படுத்தி உள்ள காலகட்டத்தில் வாழ்கிறோம்.

பிரித்தானியாவில் காணாமல் போன இந்திய மாணவர் சடலமாக மீட்பு

பிரித்தானியாவில் காணாமல் போன இந்திய மாணவர் சடலமாக மீட்பு

இதற்கு எம்மவர்களும் மறைமுகமாகவும் நேரடியாகவும் சூழ்ச்சி செய்வதும் பயணிப்பதும் நீண்ட நாட்களாக தொடர்கின்றது.

இத்தகையவர்களை சமூகத்துக்கு அடையாளம் காட்டுவதுடன் எமது அடுத்த சந்ததியினரை இச் சூழ்ச்சி வலையில் இருந்து பாதுகாத்து அரசியல் அறம் பிறழாது வாழ்வு போராட்டங்களை பாதுகாப்போடு முன்னெடுக்க வழிகாட்டும் மிகப்பெரிய பொறுப்பு விழிப்புடன் செயல்படும் அரசியல் தலைமைகளுக்கு உள்ளது.

சுயநல அரசியலையும், சுகபோக அரசியலையும், காவடி தூக்கும் அரசியலையும் புறந்தள்ளி அரசியல் தலைமைத்துவங்கள் கூட்டாக செயல்பட வேண்டிய காலம் இதுவாகும்.

அன்று உயிருக்கு பயந்து ஒரு தலைமையின் கீழ் நாங்கள் செயல்படுவோம் என போலி முகத்தோடு உறுதி பூண்ட அரசியல் தலைமைத்துவங்கள் தடம் புரண்டுள்ள இன்றைய நிலையில் தியாகத்தோடு தமிழர்களின் தேசிய அரசியலை முன்னகர்த்த அறம் சார்ந்த அரசியல் செயற்பாட்டை ராஜதந்திரத்தோடு முன்னெடுக்க அரசியல் தலைமைகளுக்கு சமூக அமைப்புக்கள் அனைத்தும் கூட்டாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு வரும் இந்திய பிரபலங்கள்: களைகட்டப்போகும் இசை நிகழ்ச்சி

யாழ்ப்பாணத்திற்கு வரும் இந்திய பிரபலங்கள்: களைகட்டப்போகும் இசை நிகழ்ச்சி

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US