தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக தகவல்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 46 தமிழ் கைதிகளில் 22 பேரை ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்வதாக உறுதியளித்துள்ளார் என தமிழீழ விடுதலைக் கழகத்தின் (TELO) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி
கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ குழுவை கடந்த சனிக்கிழமை (03) சந்தித்த போது ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
எஞ்சியுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்ட கைதிகள் புனர்வாழ்விற்குப் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள்
இதேவேளை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றிணையுமாறும், ஏனைய தரப்பினரும் இந்த செயற்பாட்டில் பங்கேற்க முன்வருமாறும் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் செயற்பட்ட வரும் குரலற்றவர்களுக்கான குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
விமானத்துக்குள் நுழைந்த ஒரு கொசு... நான்கு பேருக்கு மலேரியா தொற்று உருவானதால் பரபரப்பு News Lankasri