சமூக ஊடகங்களில் பொய்யான தகவல் பரப்பிய மற்றுமொரு நபர் கைது
சமூக ஊடகங்கள் வழியாக பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்திய குற்றச்சாட்டில் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளை - கஹாட்டபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவல் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இளைஞனின் கையடக்க தொலைபேசியை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தள ஊடகங்கள் மூலம் பொய்யான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் அண்மைய காலமாக சிலர் கைது செய்யப்பட்டனர்.
இப்படியான செயற்பாடுகளில் ஈடுபடும் நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேவையான சட்டங்களை வலுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.