அமைச்சர் லொஹான் ரத்வத்தேவை கைது செய்யுங்கள்! கூட்டமைப்பு கோரிக்கை
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவை கைது செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 12ம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ரத்வத்தேவை உடனடியாக பதவி நீக்க வேண்டுமென கட்சி வலியுறுத்தியுள்ளது. அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி அவரை உடன் கைது செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்வதாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணை நடாத்தப்பட வேண்டுமென மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவின் டுவிட்டர் கணக்கில் இது தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து பதிவிடப்பட்டுள்ளது.
We call on the government to immediately remove the State Minster for Prison Management and have him arrested and charged after an immediate inquiry for allegedly threatening to kill prisoners in Anuradhapura prison on Sunday 12th September
— TNAMedia (@TNAmediaoffice) September 14, 2021
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri