வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்னால் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் போராட்டதின் போது கைது
மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முற்பட்டவர்கள் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராஜாங்க அமைச்சரின் மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்ட பாலசுந்தரத்தின் மரணத்திற்கு நீதி கோரி இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அவரது தாய், தந்தை உள்ளிட்டோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பு நகர்ப் பகுதிக்குள் வாகனமொன்றில் வந்து போராட்டம் மேற்கொள்ள முற்பட்டவர்களை மட்டக்களப்பு மாவட்ட தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி எச்சரித்து அங்கிருந்து அனுப்பியுள்ளார்.
இருந்த போதும் அவர்கள் வேறொரு இடத்தில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க சென்ற போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


