அமெரிக்காவில் இருந்து யாழ் சென்றவரை தடுத்து நிறுத்திய இராணுவம்
அமெரிக்காவிலிருந்து நல்லூர் ஆலயத்திற்கு சென்ற போது அங்கிருந்த இலங்கை இராணுவத்தினர் தன்னை தடுத்தி நிறுத்தி வெளியேறுமாறு தெரிவித்ததாக வட அமெரிக்க தமிழ்ச் சங்கப்பேரவை தலைவர் பாலா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
மேலும் தமிழர்கள் வாழும் தமிழர் பகுதி நல்லூர் ஆலயத்தில் தமிழில் பூசை வழிபாடுகள் முன்னெடுக்காது சமஸ்கிருதத்தில் முன்னெடுக்கின்றமை வேதனையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் புனித தளத்தில் இராணுவத்தினர் துப்பாக்கியுடன் நுழைந்து தன்னை வெளியேற்றியதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam