ஆயுர்வேத மருத்துவரிடம் கொள்ளையிட்ட இராணுவ சிப்பாய் கைது
ஆயுர்வேத மருத்துவர் ஒருவரின் தங்க சங்கிலியை கொள்ளையிட்டு தப்பிச்சென்ற இராணுவ சிப்பாய் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை வெலிஓயா (மணலாறு) பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
வெலிஓயா, பராக்கிரமபுர பிரதேசத்தில் வாகனம் ஓட்டும் பயிற்சிக்கு செல்வதற்காக பாதையில் நின்றிருந்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவரிடம் இருந்தே குறித்த சிப்பாய் , தங்க சங்கிலியை பறித்தெடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து வெலிஓயா பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில், நான்கு மோட்டார் சைக்கிள் குழுக்களை ஈடுபடுத்தி மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சந்தேகநபரான இராணுவச்சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவரிடம் இருந்து ஆயுர்வேத மருத்துவரின் சங்கிலியை கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிஓய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
