கிளிநொச்சியில் குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் வீடு வழங்கி வைப்பு
கிளிநொச்சி - கண்டாவளை, புளியம்பொக்கணை பகுதியில் தற்காலிக வீடொன்றில் வசித்து வந்த குடும்பம் ஒன்றிற்கு இன்று (25) இராணுவத்தினரால் நிரந்தர வீடு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் சிறு பிள்ளைகளுடன் தற்காலிக வீட்டில் வசித்து வந்த குறித்த குடும்பத்துக்கு இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிக்கப்பட்டுள்ளது.
கலந்து கொண்டோர்
இதன்போது, கிளிநொச்சிக்கு இன்று பகல் விஜயம் செய்த இராணுவ தளபதிளயால் இந்த வீடு உரிமையாளரிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.




| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam