கொழும்பில் இராணுவம் குவிக்கப்பட்டமைக்கான காரணம் குறித்து வெளியான தகவல்
கொழும்பில் அதிக எண்ணிக்கையிலான படையினர் குவிக்கப்பட்டமைக்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மைய சில தினங்களாக கொழும்பின் பல்வேறு இடங்களிலும் அசாதாரண எண்ணிக்கையில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி ஏற்க உள்ளதாகவும் இதன்போது கலகங்கள் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தவும் இராணுவம் குவிக்கப்பட்டதாக சிலர் குறிப்பிட்டனர்.
வெளியான உண்மை காரணம்
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பாரியளவில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கும் போராட்டத்தை கட்டுப்படுத்த இராணுவம் குவிக்கப்பட்டதாக மற்றுமொரு தரப்பினர் கூறியிருந்தனர்.
எனினும், ஒத்திகை நடவடிக்கைகளுக்காக இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான படையினர் குவிக்கப்பட்டதாக பாதுகாப்புப் பேரவை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்புப் பேரவை இன்று சந்திக்க உள்ளது.

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam
