இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் கடும் வாத பிரதிவாதங்கள்! வெற்றி யார் பக்கம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் ஆறு நாடுகள் முன்வைத்துள்ள யோசனை இன்றையதினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் இந்த வாத பிரதிவாதங்கள் தொடர்பான வாக்கெடுப்பு நாளைய தினம் நடத்தப்படவுள்ளது. GMT நேரப்படி ஒன்பது மணிக்கு இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தப்படும்.
ஆறு நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை இலங்கை முழுமையாக நிராகரித்துள்ளது. சீனா, ரஷ்யா, பிலிப்பின்ஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்த யோசனைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமை பேரவை 47 உறுப்பு நாடுகளை கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் ஆதரவும் இலங்கைக்கு கிடைக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் நாய் ரோபோ to கொரியாவின் ட்ரோன்: இந்தியாவுக்கு AI மாநாட்டில் ஏற்பட்டுள்ள அவமானம் News Lankasri
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam