கொழும்பில் சர்ச்சையை ஏற்படுத்திய பிக்குவின் படம்! யுவதி தொடர்பில் வெளியான உண்மை
கொழும்பில் அண்மையில் இளம் பிக்கு ஒருவரும் யுவதி ஒருவரும் வீதியில் நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு தேரருக்கும் அந்த யுவதிக்கும் இடையில் காதல் தொடர்புகள் உள்ளதென பலரும் தெரிவித்தனர்.
பிக்கு தொடர்பில் சர்ச்சை

தேரர் ஒருவர் காதல் வயப்பட்டமைக்கு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன், பலரும் அவர்களை தவறான முறையில் விமர்ச்சித்திருந்தனர்.
இதுவொரு சமூக பிரச்சினையாக மாறியமையால் பொலிஸார் தலையிட்டு விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த புகைப்படத்தில் இருப்பவர்கள் ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரன் சகோதரி என தெரியவந்துள்ளது. குறித்த இருவரின் தாயார் புற்றுநோய் காரணமாக மகரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சமூக வலைத்தளங்களின் செயல்

தாயை பார்ப்பதற்காக அதிகாலை வீதிக்கு வந்த போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தவறாக சித்தரிக்கும் அளவிற்கு சமூக வலைத்தளங்கள் மோசமாகியுள்ளதென சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம் Cineulagam
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri